2024 மே 11, சனிக்கிழமை

30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, புளியடிக்குடா புனித லூர்து அன்னை தேவாலயத்தில் 30 அடி உயரமான  கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி தேவாலய இளைஞர், யுவதிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இக்கிறிஸ்மஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேவாலயத்தில்; ஒளி விழா நடைபெற்றது. இதன்போது, பாலன் பிறப்புக் காட்சியும் காண்பிக்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது நத்தார் பாப்பா வருகைதந்து ஆடிப்பாடி சிறுவர்கள் மற்றும் அதிதிகளுக்கு பரிசுகளும் வழங்கிவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .