2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

லெய்செஸ்டர் சிற்றியிடம் தோற்றது ஆர்சனல்

Editorial   / 2018 மே 10 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் லெய்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வென்றுள்ளதுடன், செல்சி, ஹட்டர்ஸ்பீல்ட் அணிகளுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

தமது மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை லெய்செஸ்டர் சிற்றி வென்றது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, கெலெச்சி லெஹாஞ்சோ, ஜேமி வார்டி, றியாட் மஹ்ரேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியை மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, டனிலோ, பெர்னார்டோ சில்வா, பெர்ணான்டின்ஹோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லியனார்டோ உல்லோ பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற நியூகாசில் யுனைட்டெட் அணிக்கெதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொஸ்பர் அணி வென்றிருந்தது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெற்ற கோலை ஹரி கேன் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற ஹட்டெர்ஸ்பீல்ட் டெளண் அணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் செல்சி சமநிலையில் முடித்திருந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோஸ் அலோன்ஸோ பெற்றதோடு, ஹட்டெர்ஸ்பீல்ட் டெளண் சார்பாகப் பெறப்பட்ட கோலை லோரன்ட் டெபொய்ட்ரே பெற்றிருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .