2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திக்காகவே கைத்தொழில் வலயம் ஏற்படுத்தப்படுகிறது

Niroshini   / 2016 மே 21 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

“மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்புகளின் ஊடான உற்பத்திகளை செய்ய வேண்டும் என்பதற்காக இலங்கையின் முதல் தரமான நீரியல் வள அபிவிருத்தித் திட்டம் இந்த வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் ஏற்படுத்தப்படுகிறது” என கடல்தொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற, முன்மொழியப்பட்ட தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் உருவாக்கப்படுகிறது. இந்தப் பணம் திரும்பிச் செல்வதும் அதனைப் பயன்படுத்துவது உங்களது முடிவினைப் பொறுத்தது.

அடுத்த மாதம் 15ஆம் திகதி வரையில் உங்களுக்கு காலம் தரலாம். மட்டக்களப்பு மாவட்ட எமது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த மாவட்டம் என்ற ஜனாதிபதியின் பிரேரணையின் அடிப்படையில் இந்த திட்டம் இந்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அரசாங்க அதிபரும் என்னிடம் கேட்டுக் கொண்டார் இந்த மாவட்டத்துக்கு என ஒதுக்கிய நிதியை மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பாவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இவற்றின் அடிப்படையில் நாம் சிந்திக்கிறோம்.

ஒரு சில அரசியல்வாதிகள் இதனை வரவேற்றனர். ஒரு சிலர் இது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் பெரியளவான பிரச்சினைகள் இல்லை.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இம் மாவட்டத்தின் 4,500 பேர் வரையில் வேலைவாய்ப்பைப் பெறவுள்ளனர்.

இந்த நிலத்துக்குரிய அதிகாரம், அமைச்சின் கீழோ, முதலீட்டுச் சபைக்கோ செல்லாது. மாவட்ட செயலகத்தின் கீழேயே இருக்கும். உண்மையில் இந்த திட்டத்தின் கீழ் ஐஸ் உற்பத்தி நிலையம், கடல் உற்பத்திகளை பொதிசெய்யும் நிலையங்களும் ஏற்படும். இந்த வலயம் இலங்கையிலேயே முதல் தரமான தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் ஆகும். இதன் பெறுமதியை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்.

ஹம்பாந்தோட்டையை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் துறைமுகத்தினையும் விமான நிலையத்தினையும் மையப்படுத்தி கைத்தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இங்கு இவ்வாறான தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் உருவாக்கப்படும் போது வரவேற்கப்பட வேண்டும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்.

எதிர்வரும் சனிக்கிழமை எமது அமைச்சின் பிரதிநிதிகள், அதிகாரிகள், திணைக்களத்தினர், கிராம மக்கள் உடனான இறுதிக் கலந்துரையாடலை வாகரையில் நடத்தி இத்திட்டம் வேட்டுமா வேண்டாமா என்பது பற்றி யமுடிவினை தாருங்கள்.

அதன் பின்னர் வேண்டாம் என்று சொல்லுபவர்கள் பின்னர், இந்தக் களப்பினை அபிவிருத்த pசெய்தல் மீன் உற்பத்தியினை அதிகரித்தல் போன்ற வளப்படுத்தும் அனைத்துப் பொறுப்பினையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே போன்று நாட்டில் பத்துக் களப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றினை அபிவிருத்தி செய்ய வேண்டிய செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மாவட்டங்கள் இருக்கின்றன. வேறு மாவட்டங்களுக்கு இந்த முதலீட்டினைக் கொண்டு செல்ல முடியும். இருந்தாலும் இந்த மாவட்டத்தின் களப்புகளின் ஊடான உற்பத்திகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் ஏற்படுத்தப்படுகிறது.

மீன் உள்ளிட்ட கடல் உற்பத்திகள் குறைவடைந்துள்ளன. அதனை அதிகரிப்பதற்கும் தேசிய உற்பத்திக்குப் பங்களிப்பினையும் அதிகரிக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .