2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா விற்பனைசெய்த 20 பேர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(ஜிப்ரான்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல இடங்களில் கஞ்சா மற்றும் அபின், பாபுல் என்பவற்றை விற்பனை செய்த  ஒரு பெண் உட்பட 20  பேரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட முற்றுகைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கஞ்சா மற்றும் அபின் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பத்காரி நிமால் பண்டார தெரிவித்தார்.

சந்தேக நபர்களில் 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபேது தண்டப்பணம் அறவிடப்பட்டதாகவும் மூவர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .