2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

Super User   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லோஹித், ஜிப்ரான், கே.எஸ். வதனகுமார்)

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறில் வீடொன்று எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மேற்படி சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையிலான கைகலப்பின்போது துப்பாக்கி வெடித்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • m.a.m. fowz Sunday, 17 October 2010 03:00 AM

    நீதி நீயாயம் இல்லை இலங்கையில்
    இறைவா.....நன்றி நியூஸ்

    Reply : 0       0

    m.a.m. fowz Sunday, 17 October 2010 03:01 AM

    நீதி நீயாயம் இல்லை இலங்கை யில்
    இறைவா....நன்றிநியூஸ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .