2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாழைச்சேனை கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கான முன்னோடி நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான சந்தைப்பகுதியில் இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக அதனைத் தடுப்பதற்கான முன்னோடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் முகமாக கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று வாழைச்சேனை 'சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை'யின் கேட்போர் மண்டபத்தில் வாழைச்சேனை பிரதி பொலிஸ் அதிகாரி ஐ.பி.ரணசிங்க தலமையில் இடம்பெற்றது.

பெருமளவிலான வர்த்தகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கொள்ளையினைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பினை உறுத்திப்படுத்தும் நோக்கிலும் காவல் கடமையில் ஈடுபடுவதற்காக தமிழ் முஸ்லிம் வர்த்தக சங்கங்களினூடாக 8 பாதுகாப்பு உத்தியோகஸ்தகர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான கொடுப்பனவு வர்த்தக நிலையங்களினூடாக தீர்மானம் எடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .