2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமையல்வாயு கசிந்து தீ விபத்து: ஆசிரியை காயம்

Super User   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வாழைச்சேனை பேய்தாழை பகுதியிலுள்ள ஆசிரியை ஒருவர், சமையல் வாயு கசிவினால் ஏற்பட்ட தீயினால் எரிகாயங்களுக்குள்ளாகி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஆசிரியை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டினுள் சமையல் வாயு கசிவு காணப்பட்டதாகவும் அவர் அடுப்பை பரீட்சித்தபோது அதுதீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தீயினால் எரிகாயங்களுக்குள்ளான ஆசிரியை, அவரின் மகளினால் காப்பாற்றப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .