2024 மே 11, சனிக்கிழமை

பெரியகல்லாறு ஆலயத்தில் கொள்ளை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 24 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கிழக்கு மாகாணத்தில் வரலாற்று புகழ் மிக்க ஆலயங்களுல் ஒன்றான களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு ஸ்ரீ கலாட்சியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆலய வளாகத்துக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் ஆலயத்தை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஆலயத்தலைவர் பேரின்பராசா தெரிவித்தார்.

ஆலயத்தின் பரிபாலன ஆலயமாகவுள்ள நாகதம்பிரான் மற்றும் வைரவர் ஆலயங்கள் உடைக்கப்பட்டு அதன் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உண்டியலில் உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பணம் உட்பட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி தொடர்பில் இதுவரை தெரியவில்லையென தெரிவித்த அவர் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .