2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாகரையில் உள்ளூர் போக்குவரத்திற்கு இ.போ.ச. பஸ்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திலுள்ள உள்ளூர் மக்களின் போக்குவரத்து பிரச்சினையின் குறைபாடுகளை 'யு.எஸ்.எயிட்' நிறுவனம் இனங்கண்ட நிலையில், இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பழுதடைந்த  5 பஸ் வண்டிகளை திருத்தம் செய்து மீண்டும் மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும்; நிகழ்வும் இயந்திர உபகரணங்களை வழங்கும் நிகழ்வும்  நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாகரை பஸ் டிப்போவில் சாலை முகாமையாளர் ஜீ.மஹிமதர்ஷன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; கோறளை வடக்கு பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, கிழக்கு மாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் எம்.என்.எச்.எம்.நசீர், யு.எஸ்.ஏயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப்பணிப்பாளர் ரெமி ஹரிஸ், திட்டப்பிரதிநிதி சாந்தி டுயிவெல், பொலிஸ் பரிசோதகர் ஜ.பி.ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .