2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மோட்டார் சைக்கிள் ஒன்றும் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி திருமலை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சைக்கிளில் பயணம் செய்தவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈச்சந்தீவிலிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த விவசாயியான ச.இந்திரன் (வயது 58) என்பவரே விபத்தில் காயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .