2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த சந்தேக நபர்கள் இருவரும் தங்கள் வசம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  ஏறாவூர்; பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .