2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்த 5,893 வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிதியொதுக்கீடு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது முழுமையாக சேதமடைந்த 5,893 வீடுகளை புனரமைப்பதற்காக 589.3மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  ரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடந்த வெள்ளத்தினால் அனர்த்தத்தினால் பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

ஒரு வீட்டுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 5,893 வீடுகளுக்கும் இப்பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணம் சகல பிரதேச செயலகங்கங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  ரா.நெடுஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .