2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொல்கொல்லவில் நீர்வெட்டு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - பொல்கொல்ல பகுதியின் சில பகுதிகளில், இன்று (12) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அமுனுகம வீதி, 606ஆம் இலக்க வீதி, லேவெல்ல, பாபர்வத்த, சிறிமல்வத்த, மடவல வீதி, பல்லேகுன்னேபான, கங்கை வீதி, தெகல்தொருவ விகாரை வீதி ஆகிய பகுதிகளிலேயே, நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பொல்கொல்ல நீர்வழங்கல் திட்டத்துடன் இணைந்த நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையத்துக்கு, புதிய நீர்ப்பம்பியையும் மின்னணுச் சாதனங்களையும் பொருத்தும் நடவடிக்கையின் முதற்கட்டம்

இடம்பெறுவதாலேயே, இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதென, மேற்படி சபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .