2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Kogilavani   / 2016 ஜூலை 14 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் , ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டனிலிருந்து பெக்கோ இயந்திரத்தை ஏற்றிச்சென்ற பார ஊர்தியும் கண்டி திகனயிலிரூந்து ரொசல்லக்கு  பயணித்த முச்சக்கரவண்டியும்  கினித்தேனை தியகல பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் குழந்தை உட்பட படுகாயமடைந்த நால்வரும் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி மேலதிக சிக்கிசைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பார ஊர்தியின் சாரதியை கினிகத்தேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .