2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா சகோதரிகள் இருவர் கண்டியில் கைது

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பேராதனை பிரதேசத்தில் பெருமளவில் கஞ்சாவை விநியோகம் செய்த இரண்டு சகோதரிகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையின் பிரகாரமே இவ்விரு சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சகோதரிகளில் ஒருவரை கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மற்றைய சகோதரியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .