2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புகையிரத நிலையத்திலிருந்து சிசு மீட்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிறந்து மூன்றே மாதங்களான சிசுவொன்று அப்புத்தளை புகையிரத நிலையத்திலுள்ள கதிரையொன்றில் கைவிடப்பட்ட நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. துணியால் நன்றாகச் சுற்றப்பட்ட நிலையிலேயே மேற்படி சிசு கைவிடப்பட்டிருந்ததாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிசு தற்போது தியத்தலாவை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சிசு ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைவிடப்பட்ட சிசுவின் தயாய் குறித்து அப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .