2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெண்ணை வழிமறித்து தங்கநகைகள் கொள்ளை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொகவந்தலாவ நிருபர்

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம வேவர்லி தோட்டத்தில் இருந்து, டயகம நகரத்திற்கு வந்த 50வயது பெண் ஒருவரின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இன்று(08) காலை 11மணியளவில் நால்வர் கொண்ட குழுவினர் குறித்த பெண்ணை தாக்கியதுடன், அவர்  அணிந்திருந்த தங்க ஆபரணங்களையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் தற்பொழுது டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில, டயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .