2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டம், தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தச்கர பிரதேசத்தில் கஞ்சா வடிகால் மற்றும் துப்பாக்கி ரவை வைத்திருந்த ஒருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்துள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபர், முருதஹகமுல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவரிடமிருந்து 12 கஞ்சா வடிகாலும் துப்பாக்கி ரவைகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தவுலகல பொலிஸார் தெரிவித்தனர். 

தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவரை கைது செய்ததாகவும் இந்நபரை கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தவுலகல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .