2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உத்தரவை மீறிய பேருவளை வியாபாரிகள்

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

கொவிட் 19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், பேருவளை பிரதேச சபையின் கீழ் இயங்கும் வாராந்த சந்தையை நடத்த  வேண்டாமென, பிரதேச சபை தவிசாளர் விமலரத்ன அறிவித்திருந்தும், அதனை மீறும் வகையில், வர்த்தகர்கள் இன்று(16) வியாபாரச்  செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், ​சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் அதிகளவில் வருகைதராத நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சந்தையை சுற்றி பார்வையிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், வர்த்தகர்களில் செயற்பாடுகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .