2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெள்ள நீரால் நீர்கொழும்பு மற்றும் கட்டானை பிரதேசங்களிலும் பாதிப்பு

Sudharshini   / 2016 மே 18 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

சீரற்ற காலநிலையால் நீர்கொழும்பு மற்றும் கட்டானை  பிரதேசங்களும் வெள்ள நீரில் மூழ்கியள்ளன.

மேற்படி பிரதேசங்களில் உள்ள உள்வீதிகள் தொடர்ந்தும்; வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதியுள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கட்டானை, தளுபத்தை, பெரியமுல்லை, தளுவகொட்டுவ, அங்குருகாரமுல்ல கொச்சிக்கடை, வெலிஹேன, பலகத்துறை, போருதொட்டை உட்பட பல கிராம சேவகர் பிரிவுகள் வெள்ள நீரினால்  தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

நீரகொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான கொட்டுவை மைதானம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .