Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 14 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்,செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்களில் 20 மீனவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ ஞாயிற்றுக்கிழமை(13) உத்தரவிட்டார்.
குறித்த 23 இந்திய மீனவர்களும் 3 படகுகளில் மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சனிக்கிழமை(12) மாலை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் ஞாயிற்றுக்கிழமை(13) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, குறித்த மீனவர்களில் 20 பேரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 3 மீனவர்களும் சிறுவர் தொழிலாளர்கள் என்பதால் அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இதேவேளை, நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்தஇராமேஸ்வரம் பகுதியைச் சேர்;ந்த ஐந்து மீனவர்களையு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் இராமலிங்கம் சபேசன் ஞாயிற்றுக்கிழமை (13) உத்தரவிட்டார்.
1 விசைப்படகுடன் வந்த குறித்த ஐவரும் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது காங்கேசன்துறை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago