2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தர்மலிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமர்ர் வி. தர்மலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, யாழ்ப்பாணம் - தாவடியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில், இன்று (02) நடைபெற்றது.

அக்கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிரஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிறிசற்குணராசா, கோப்பாய் ஆசிரியர் கலாசாலைப் பிரதி அதிபர் லலீசன், யாழ்ப்பாணம் மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .