2024 மே 08, புதன்கிழமை

பொலிஸாரின் வாகனம் கடத்திச் செல்லப்பட்டு மீட்கப்பட்டது

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

கொடிகாமம் பொலிஸாரின் வாகனமொன்றை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

மேற்படி பாலாவிப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அங்கு பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு அங்கு பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாரின் வாகனத்தை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்களும் காணப்பட்டதாகவும் அந்த வாகனத்துடன் நின்ற பொலிஸாரைத் தாக்கிவிட்டே வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஆயுதங்களுடன் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தை பொலிஸார் தேடுதல் வேட்டை நடாத்தினர். அந்தப் பகுதி முழுவதும் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு நடத்திய தேடுதலால் சில மணி நேரம் அங்கு பெரும் பதற்றமே ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு அப்பகுதி முழுவதும் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் கொடிகாமம் ஆலடிப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை எடுத்துச் சென்றவர் மது போதையில் இருந்ததாகவம் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X