2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். வலய கல்விப் பணிமணை முன்பாக தொண்டராசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஆசிரிய உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகளின் மெத்தனப்போக்காலேயே தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறி, யாழ். வலயக் கல்விப் பணிமனையின் முன்பாக தொண்டராசிரியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.


2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆசிரிய உதவியாளர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. இதற்கென குறிப்பிட்ட தகைமையும் 3 வருட தொடர்சேவையும் விண்ணப்பதாரிக்கான தகைமைகளாக கருதப்பட்டன. அவை இரண்டும் இருந்தபோதிலும், அதிகாரிகளின் அசமந்தப்போக்கு மற்றும் செல்வாக்கு காரணமாக அவை தமக்குத் தரப்படவில்லையென தொண்டராசிரியர்கள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .