2024 மே 02, வியாழக்கிழமை

யாழ். வீதிகள் புனரமைப்புக்கு அனுமதி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பெருந்தெருக்கள் மற்றும் உப வீதிகள் மாநகரசபையால புனரமைக்கப்படவுள்ளதாக மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

யாழ். மாநகரசபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுனரிடம் வீதிகள் அபிவிருத்தி செய்வது தொடர்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுனர். ஜி.ஏ. சந்திரசிறியால்
தற்போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து ஜனவரி மாதம் முதல் மாநகரசபைக்கு உட்பட்ட அனைத்து
வீதிகளும் காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்திற்கு மாநகரசபையின் அதிகாரிகள் ஊழியர்களே செயலாற்றவுள்ளனர் என்று யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .