2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை அரச வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் இன்று தெரிவித்தார்.

இவ் வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் பி.திருமாறன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு கோரி வைத்தியர்கள் கடந்த 4 நாட்களாக காலை ஒரு மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அரச வைத்திய சங்கத்தின் தாய் சங்க தலைவருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பினை நிறைவு செய்ய தீர்மானித்ததாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய சங்க தலைவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .