2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய படகை இழுத்துச்செல்ல இரு படகுகளுக்கு அனுமதி: கடற்படை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயந்திரக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம், மாதகல் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இந்திய இழுவைப் படகை இழுத்துச் செல்வதற்காக இன்று இரவு மேலும் இரு இந்தியப் படகுகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளன.

மேற்படி இரு படகுகளும் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது என்று யாழ். கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்துடன், செயலிழந்த படகிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரும் கடற்படையினரால் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உணவு போன்றன கடற்படையினரால் வழங்கப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். (எஸ்.கே.பிரசாத்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .