2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடக்கில் வாக்கெண்ணும் பணிகளில் மாற்றம்

Kogilavani   / 2013 ஜூலை 25 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகளை மாவட்ட செயலத்திற்கு வெளியே நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் வாக்கெண்ணும் பணிகள் யாவும் மாவட்ட செயலகத்திலே நடைபெற்று வந்ததாகவும் இம்முறை மாவட்டச் செயலகத்தில் போதிய இடவசதியில்லாத காரணத்தினால் இந்த வாக்கெண்ணும் பணிகள் மாவட்டச் செயலகத்திற்கு வெளியே நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்.நகரத்தில் உள்ள முக்கிய பாடசாலைகளில் இந்த பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .