2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவில் ஆணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஜூலை 31 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ் புங்குடுதீவுப் கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உருக்குலைந்த நிலையில் புங்குடுதீவு 10 வட்டார கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்த சடலத்தை கடற்படை மீட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள இந்த சடலம் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .