2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஓவியக்கண்காட்சி கூடம் திறப்பு: 30 வரை பார்வையிடலாம்

Super User   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.குகன்

திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் ஈழத்தின் முன்னணி ஓவியர் செல்வகுமார் மார்க்கின் ஓவியங்களின் கண்காட்சி கூடம் கலைத்தூது கலா முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ள இந்த ஓவியக் கண்காட்சி கூடத்தினை ஓவியர் ரமணி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற இயக்குநர் மரியசேவியர் அடிகளார், பிரதி இயக்குநர் ஜோன்சன் ராஜ்குமார், ஓவியர் ஆசை இராசையா, ஓவியத்துறைசார் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .