2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

65 இந்திய மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் கூறப்படும் 65 இந்திய மீனவர்களை  9 ரோலர் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 34 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்த இந்த 34  இந்திய மீனவர்களையும் பருத்தித்துறை பொலிஸாரிடம், கடற்படையினர் ஒப்படைத்துள்ளதாக  வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத் தலைவர்  வை.அருள்தாஸ் தெரிவித்தார்.

இந்த 34  இந்திய மீனவர்களும் 5 ரோலர் படகுகளில் வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களின் 5 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த 34  இந்திய மீனவர்களையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு கிழக்கு பகுதியில் 4 படகுகளுடன் 31 இந்திய மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .