Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
எம். றொசாந்த் / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொக்குவிலில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஏழு பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி. சிவலிங்கம் இன்று (09) உத்தரவிட்டார்.
பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி என்று தெரிவிக்கப்பட்ட நிசா விக்டர் உள்ளிட்ட 6 பேரை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை (07) பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர். மறுநாள் மற்றொரு சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
அவர்கள், நீதிமன்றில் அனுமதியுடன் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் ஏழு பேரும், யாழ்ப்பாணம் பதில் நீதிவான் முன்னிலையில் இன்று (09) முற்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago