2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிவில் பாதுகாப்பு அதிகாரியின் மோட்டார்சைக்கிள் மோதி வயோதிபர் பலி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்

பொலன்னறுவை, அரங்கன்வில பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரியொருவர் செலுத்திய மோட்டார்சைக்கிள் மோதியதில் பாதையைக் கடக்க முற்பட்ட வயோதிபரொருவர், இன்று புதன்கிழமை (30) காலை உயிரிழந்துள்ளார்.
 
யாய 5 அரங்கன்வில பகுதியைச் சேர்ந்த 73 வயதான விக்கிரமசிங்க முதியந்சேலாகே டிகிரி பண்டா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
இந்த விபத்துக்கு காரணமாக இருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரியை கைது செய்துள்ளதாக அரங்கன்வில பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரங்கன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .