2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடம்பெயர்ந்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத்  றஹ்மத்துல்லா)

இடம்பெயர்ந்த யுவதிகளுக்காக மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சியில்  பயிற்சிநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கு தையல் இயந்திரங்கள் நேற்று வழங்கப்பட்டன.

உடப்பு, முந்தல்,  மதுரங்குளி மற்றும் புத்தளப் பிரதேசங்களில் உள்ள இடம்பெயர்ந்த யுவதிகள் இதனை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு 6 மாத பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன்,  அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மீள்குடியேற்ற அமைச்சரின் புத்தளம் மற்றும்  அநுராதபுரம் மாவட்டங்களுக்கான இணைப்புச் செயலாளார் எம்.முஜாஹிர்  இவற்றினை வழங்கி வைத்தார்.

இதேவேளை,  நேற்று மாலை புத்தளம் முல்லை நகர் மீள்குடியுற்ற  கிராமத்தில் முகாம் அதிகாரி ஏ.சீ.எம்.மாஹிர் தலைமையில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமொன்றும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .