2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்தை முன்னிட்டு மத வழிபாடு

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ். எம். மும்தாஜ்)


ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தை முன்னிட்டு இந்து சமய மத வழிபாட்டு நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை உடப்பு ஸ்ரீருக்மனி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தில் இடம்பெற்றது.

முந்தல் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முந்தல் பிரதேச செயலாளர் ஏ.சி.எம்.நபீல், ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் உப தலைவர் கே.தட்சனாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முந்தல் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மத வழிபாட்டு நிகழ்வுகள் இவ்வாரம் வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .