2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முந்தலில் பாரிய கசிப்பு நிலையம் முற்றுகை

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்
 
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹக்கும்புக்கடவள, ஹோங்கஸ்வெவ எனும் பிரசேத்தின் தோட்டம் ஒன்றில் இரகசியமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட பாரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை நேற்று வெள்ளிக்கிழமை மாலை முந்தல் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இந்த கசிப்பு உற்பத்தியினை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு வசதியாக அத்தோட்டத்தில் மிருக வளர்ப்பு பண்ணை ஒன்றும் சந்தேக நபரினால் நடாத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடாத்திச் சென்றதாகச் சொல்லப்படும் பிரதான சந்தேக நபரான பெண் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலும் இருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து முந்தல் பொலிஸாரும் மஹக்கும்புக்கடவள பொலிஸ் காவலரண் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது சுமார் 60 பெரல்கள் உட்பட கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் முந்தல் பொலிஸார், சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் உபகரணங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .