2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாடசாலை அதிபர் பிணையில் விடுதலை

Super User   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையில் அதிபர் சுமனசிரி அமரசிங்க நேற்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பழைய மேசைகள் மற்றும் கதிரைகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த அதிபர் புத்தளம் பதில் நீதவான் எம்.ஏ.பசால் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த பாடசாலையில் பெற்றோர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரை ஜனவரி மாதம் 8ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தல் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .