2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலனறுவையில் வர்த்தக மையம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

பொலனறுவை மாவட்டத்தின் கதுறுவெல பிரதேசத்தில் வர்த்தக மையம் ஒன்றை நிர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று (24) சென்று பார்வையிட்டார்.

பொலனறுவை மாவட்டத்தின் கதுறுவெல பிரதேசத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 324 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த வர்த்தக மையம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு எதிர்வரும் செப்​டெம்பர் மாதம் 7ஆம்; திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .