2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கிளியின் முதுகில் அமர்ந்து ஊரைச் சுற்றிப் பறக்கும் குரங்கு

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரத்திற்கு மரம் தாவுவதில் குரங்குகள் பெயர் பெற்றவை. ஆனால், கொலம்பியா நாட்டிலுள்ள குரங்கொன்று கிளியொன்றின் முதுகில் தொற்றிக்கொள்வதன் மூலம் ஊரைச்சுற்றி வருகிறது.

அக்குரங்கு நீலம் மற்றும் தங்க நிறம் கலந்த கிளியொன்றுடன் நட்பாக உள்ளது.

அப்பெண் கிளியின்  முதுகில் தொற்றிக்கொள்வதால் பறந்து திரிய முடியும் என்ற நம்பிக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறது அக்குரங்கு.

நாட்டுப்புற ஹோட்டல் ஒன்றில் ஆண் மற்றும் பெண் கிளிகளுடன் இந்த குரங்கு வளர்ந்து வருகின்றது. இம்மூன்று விலங்குகளும் ஒற்றுமையாக பிரிக்கப்பட முடியாதனவாக வாழ்ந்து வருகின்றனவாம்.

அக்குரங்கின் பிடித்தமான செயற்பாடு கிளியின் முகில் ஏறியமர்ந்துக்கொண்டு சுற்றிவருவதுதான் என்று படப்பிடிப்பாளரான அல்ஜென்ரோ ஜராமிலோ (வயது 23) என்பவர் கூறுகிறார். கொலம்பியாவில் உள்ள சான் ஆகஸ்டன் நகரில் இந்த அதிசய நண்பர்களை படம்பிடித்துள்ளார் அவர்.

'ஆச்சரியமிக்க வகையில் இந்த குரங்கு ஒருபோதும் கீழே தவறி வீழ்ந்ததில்லை. அது கிளியின் கழுத்துப் பகுதியை தனது கைகளால் நன்றாக இறுக்கிப் பிடித்துக்கொள்கிறது' என்கிறார் ஜராமிலோ



You May Also Like

  Comments - 0

  • thavan Friday, 29 October 2010 07:50 PM

    இந்த மிருகங்களின் ஒற்றுமையைக் கண்டு மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்நட்பு தொடரட்டும்.

    Reply : 0       0

    nilu Saturday, 30 October 2010 02:36 AM

    Very good News

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .