2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச செயலகங்கள் புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( ரி-விவேகராசா)

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்தகால யுத்தத்தின்போது சேதமடைந்த துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் பிரதேச செயலகங்கள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

இதற்கு ஏழு கோடியே 35 இலட்சம் ரூபாய்  செலவிடப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், முல்லைத்தீவில் இன்னும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .