2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தில் கிளைமோர் குண்டுகள் மீட்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(விவேகராசா)

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த வீடொன்றிலிருந்து  06 கிளைமோர் குண்டுகளை வவுனியா பொலிஸார் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர்.

வீடொன்றின் மதிலை உடைக்கும் போது இக்கிளைமோர் குண்டுகள் கிடப்பதை கண்ட  வீட்டுரிமையாளர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸார்  இக்கிளைமோர் குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இவை ஒவ்வொன்றும் 08 கிலோகிராம்  நிறையை உடையதாகவும் நீண்ட காலத்திற்கு முன் இங்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .