2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ ரங்காவின் கட்சி வேட்பாளர்கள் இருவர் ஜ.ம.சு.முவில் இணைவு

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

முல்லைத்தீவு, பாண்டியன் குளம் பிரதேச சபை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவின் தலைமையிலான பிரஜைகள் முன்னணியின்  பஸ் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஞானசீலன் ரொபின், அக்கட்சியிலிருந்து விலகி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே இவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் முன்னிலையில் இணைந்துள்ளார்.

பாண்டியன் குளம் பிரதேச சபைக்கான பிரஜைகள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் ஞானசீலன் ரொபினுடன் அக்கட்சியின் மற்றுமொரு வேட்பாளர் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Saturday, 19 February 2011 11:18 PM

    தன்வினை தன்னைச் சுடும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .