2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட செயலக கட்டடம், 10ஆம் திகதி திறந்துவைக்கப்படும்

George   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்


முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டட தொகுதி, எதிர்வரும் 10ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், புதன்கிழமை(04) தெரிவித்தார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவால் இந்த கட்டடம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்தக் கட்டடம், 6ஆம் திகதி திறப்பதாக இருந்தபோதும், தவிர்க்க முடியாத காரணங்களால் 10 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு நகரத்தில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக முல்லைத்தீவு நகரின் சகல கட்டுமானங்களும் அழிவடைந்தன. 

இதனால் நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். 1996ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந்த மக்கள் 2004 ஆம் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் பாதிப்புக்குள்ளாகினார். இதன்போது 3000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

2008ஆம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்றபோதும் முல்லைத்தீவு நகரம் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது. 

2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர், முல்லைத்தீவு நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக கட்டடப் பணிகள் 220 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .