2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரில் மேலுமொரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இன்னுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (13) உயிரிழந்துள்ளார்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடுமுறையில் சென்ற அநுராதபுரம் – தளாவப் பகுதியை சேர்ந்த எஸ்.ரத்னாயக்க (வயது 28) என்ற பொலிஸ் அதிகாரியே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்னர், மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி – ஹெத்தாகடஹெட்ட, வீரகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பி.சீ.பியரத்தின (வய 45) என்பவர், ஞாயிற்றுக்கிழமை (12) உயிரிழந்தார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள், காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .