2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் மேலும் 3 தொற்றாளர்கள்

Niroshini   / 2021 ஜனவரி 14 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு, இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா - பட்டாணிசூர் பகுதியில், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்,

வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதனடிப்படையில், வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் 3  பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 151 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .