2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உழைக்கத்தெரியாமல் கடன்படேல்!

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களிடம் சிறுகச் சிறுக சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கவே வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றுக்கு இதர பணிகள் பல இருந்தாலும், சேமிக்கும் விடயங்களை மக்களிடையே உருவாக்கச் செய்யும் பணிகளை இன்றளவும் செய்து வருகின்றன. 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்களில் பலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அரசாங்க வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும் பழக்கம் வைரஸாகப் பரவிவிட்டது. 

சொகுசு வாகனங்களைக் கடனுக்கு வாங்குதல், வருமானத்துக்கு மீறிய வகையில் வீடுகளைக் கடன்பட்டுக் கட்டுவதற்காக புற்றீசல்கள்போல் வங்கிகளை மொய்த்துப் பணம்பெற்று, ஈற்றில் பெற்ற பணத்துக்கு வட்டிகூடக் கட்ட வழியின்றி, வீடு, வாசல், வாகனங்களை இழந்து, நடுத்தெருவில் நிற்கும் மக்கள் கூட்டம் ஏராளம், ஏராளம். 

தகுதிக்கு மீறி ஆசைப்படேல்; உழைக்கத்தெரியாமல் கடன்படேல்! 

 

வாழ்வியல் தரிசனம் 19/12/2016

பருத்தியூர் பால – வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .