Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
2017ஆம் ஆண்டுக்கான கல்முனை மாநகரசபையின் வரவு -செலவுத்திட்ட நகல் பிரதிகளை பொதுமக்கள் பார்வையிட முடியும் என அம்மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
இன்று (22) முதல் எதிர்வரும் 28ஆம் திகதிவரை அலுவலக நேரங்களில் மாநகரசபையின் நிதிப் பிரிவில் இந்த வரவு- செலவுத் திட்ட நகல் பிரதிகளைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இந்த வரவு -செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க விரும்புவோர் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago
12 Dec 2025