Niroshini / 2016 மார்ச் 23 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
அம்பாறை, நாவிதன்வெளி, குடியிருப்புமுனை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் முதலைக்கடிக்கு இலக்காகிய சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை(22) இரவு இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயங்களுக்குள்ளான வயோதிபர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடியிருப்புமுனை கிராமத்தைச் சேர்ந்;த சீ.ருக்மாங்கரன் (வயது 64 ) என்பவரே இவ்வாறு முதலைக் கடிக்கு இலக்காகியுள்ளார்.
குடியிருப்புமுனை ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த குறித்த வயோதிபரை முதலை பிடித்து நீருக்குள் இழுத்துள்ளது.
இதன்போது, குறித்த வயோதிபர் அபயக்குரல் எழுப்பியதையடுத்து, சக மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டார்.
12 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago