Kogilavani / 2016 ஜூலை 08 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தில் வெற்றிடமாகவுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்; பதவிக்கு, இலங்கை கல்வி நிர்வாக சேவையிலுள்ள தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.டபிள்யூ.ஜி. தியாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இலங்கை கல்வி நிர்;வாக சேவையிலுள்ள தரம் 1, தரம் 11 அல்லது தரம் 111ச் சேர்;ந்த உத்தியோகத்தர்;, தரம் 111ச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் குறைந்த பட்சம் 5 வருட செயலூக்கம்மிக்கதும் திருப்திகரமானதுமான சேவையை பூர்;த்தி செய்தவர்களாக இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டுமெனவும் கேட்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கு மாகாணத்தில் கடமைபுரியும் இலங்கை கல்வி நிர்வாக சேவையிலுள்ள உத்தியோகத்தர்;கள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமென அவர் அறிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவத்தை எதிர்ர்வரும் 29ம் திகதிக்கு முன்னர்; செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், 198 உடதுறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
34 minute ago
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago
46 minute ago
51 minute ago