Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.ஜெஸ்மின்)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காரைதீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட மாளிகைக்காடு அல்ஹுசைன் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கும் சிரமதான நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் கல்முனை வலய கல்வி அலுவலக்ததைச் சேர்ந்த பிரதி கல்விப்பணிப்பாளர் பீ.சிவப்பிரகாசம் உட்பட ஆசிரிய ஆலோசகர்களும் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இவ்வாரம் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நாடெங்கிலும் அரசாங்கம் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

14 minute ago
37 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
37 minute ago
3 hours ago
4 hours ago